‘மிக்ஜாம் புயல்’ காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் (01-12-2023) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று (02-12-2023) காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதனிடையே வங்க கடலில் நிலைகொண்டுள்ள ‘மிக்ஜாம்’ புயல் தீவிர புயலாக மாறுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 290 கி.மீ தொலைவில் மிக்ஜாம் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post ‘மிக்ஜாம் புயல்’ காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! appeared first on Dinakaran.

Related Stories: