ஆனால் மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 04ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மிசோரம் மாநிலத்தை தவிற மத்திய பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் படி தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தவரையில் பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலைக்குள் பெரும்பான்மை நிலவரம் தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
The post மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது appeared first on Dinakaran.