அரசு பள்ளி மாணவர்களுக்கு காப்பீடு அட்டை மேயர் வழங்கினார்

கரூர், டிச. 3: மாநகராட்சி ஆண்கள் பள்ளி மாணவர்களுக்கு காப்பீட்டு அட்டைகளை மேயர் வழங்கினார். தமிழக முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் உத்தரவின்படி பள்ளி மாணவ மாணவிகளுக்கு புதிதாக காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் அட்டை வழங்கும் முகாம் நடந்தது,

மேயர் கவிதா கணேசன் தலைமை வகித்த மாணவர்களுக்கு காப்பீடு திட்டத்திற்கான அடையாள அட்டைகளை வழங்கினார். இணை இயக்குனர்- நலப் பணிகள்துறை மருத்துவர்கள், காப்பீட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post அரசு பள்ளி மாணவர்களுக்கு காப்பீடு அட்டை மேயர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: