தற்போது சாலையின் இருபுறமும் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது, வாகனங்கள் விலகும்போது சீமை கருவேல முள் காயங்களை ஏற்படுத்தி வருவதாக இருச்சக்கர வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். மேலும் கார் உள்ளிட்ட வாகனங்களின் முள் உரசி வாகனங்கள் சேதமடைந்து வருவதாக கூறுகின்றனர். இதனை போன்று மங்களத்திற்கும் மலட்டாறு பாலத்திற்கு இடையே இரண்டு இடங்களில் ஒரு சிமிண்ட் குழாய்கள் பொறுத்தப்பட்டு தரைப்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் முறையாக பணிகள் நடக்காததால் சில மாதங்களிலேயே பள்ளம் ஏற்பட்டு சேதமடைந்து காணப்படுவதால் அந்த இடத்திலும் விபத்துகள் நடந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். எனவே சீமை கருவேல மரங்களை அகற்றி, பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கடலாடி-கோவிலாங்குளம் சாலையில் சீமை கருவேல மரங்களால் போக்குவரத்து இடையூறு: உடனடியாக அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.