குளிர்கால பனிமூட்டமும் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியாக உடற்பயிற்சி, நடைபயிற்சிகள் செய்தனர். ஆனால் மக்களின் நிம்மதியை குலைக்கும் வகையில் டெல்லியின் சில பகுதிகளில் நேற்று மீண்டும் கடுமையான பிரிவிற்கு காற்று மாசு சென்றது. இதனால், கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அஞ்சப்பட்டது. இந்த நிலையில் ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டெல்லியில் சில பகுதிகளில் காற்று மாசு ‘மிகவும் மோசம்’ என்ற பிரிவுக்கு சென்றுள்ளது. ஆனந்த் விகார், அசோக் விகாரில் முறையே 388, 386 புள்ளிகளாக காற்று மாசு பதிவாகி இருக்கிறது. லோதி சாலை 349, நேரு மைதானம் 366,’ என கூறப்பட்டுள்ளது.
The post “மிகவும் மோசம்” பிரிவிற்கு சென்றது காற்று மாசு.. எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி : டெல்லி மக்கள் சோகம் appeared first on Dinakaran.
