இந்த நிலையில் பா.வளர்மதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது. இம்மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி அனிருத்தா போஸ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பா.வளர்மதி தரப்பில், ‘சொத்து குவிப்பு வழக்கு கடந்த 10 ஆண்டுக்கு முன்பே முடித்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது சரியல்ல. எனவே தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோரின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டது.
நீதிபதி அளித்த உத்தரவில், ‘மேல் முறையீட்டு மனுவிற்கு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும்’ என்றார். தொடர்ந்து பா.வளர்மதி தரப்பில், ‘சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டது. அப்போது நீதிபதி, ‘சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது’ என்று உத்தரவிட்டார்.
The post பா.வளர்மதி மீதான சொத்துகுவிப்பு வழக்கு ஐகோர்ட் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
