சென்னையில் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் நாளை முதல் 4ம் தேதி வரை முதல்வர் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைப்பு

சென்னை: உலக மாற்றுத்திறனாளிகள் தினம். ஆண்டுதோறும் டிசம்பர் மூன்றாம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, டிசம்பர் 2ம் தேதி காலை 10.30 மணியளவில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா, விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற இருந்தது.

தற்போது, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2 முதல் டிசம்பர் 4ம் தேதி வரை சென்னையில் புயல், கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, டிசம்பர் 2ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது. இவ்விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post சென்னையில் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் நாளை முதல் 4ம் தேதி வரை முதல்வர் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: