ஆனால் இந்த கால்வாய் கடந்த 2 வருடத்திற்கும் மேலாக புதர்கள் மண்டியும், குப்பைகள் கொட்டியும் அதன் தடமே மறைந்து விட்டது. இந்த புதர்களையும் குப்பைகளையும் அகற்ற வேண்டும் என விவசாயிகள் பலமுறை திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தனர். மேலும் பொதுப்பணி துறையினருக்கும் பலமுறை கோரிக்கை வைத்தனர். யாரும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஆரணியாற்றில் தண்ணீர் வரத்து அதிகமானதால் சின்னம்பேடு ஏரிக்கு விவசாயிகளே தண்ணீர் திறந்து விட்டனர். ஆனால் கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாமல் குப்பைகள் அடைத்துக்கொண்டது. இதையறிந்த விவசாயிகள் குப்பைகளை அவர்களே அகற்றினர். பின்னர் தண்ணீர் ஏரிக்கு சென்றது. மேலும் வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாதவாறு கால்வாயை பராமரிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
The post பெரியபாளையம் – சின்னம்பேடு கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சீர் செய்த விவசாயிகள் appeared first on Dinakaran.
