இதனால் குடியிருப்பு பகுதிகளிலும், நகரின் முக்கிய சாலைகளிலும் மழைநீர் சூழ்ந்தது. இரவு தாண்டியும் மழை நீடித்த நிலையில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தொடர் மழை எதிரொலியாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் வேறொரு தேதியில் நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
The post தொடர் கனமழை காரணமாக இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வு வேறொரு தேதியில் நடைபெறும்: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.
