இந்நிலையில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் அனுப்பி வைத்துள்ளார். இத்தகைய கேரள ஆளுநரின் முடிவுக்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கேரள ஆளுநருக்கு எதிரான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் கேரள ஆளுநர் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார் என கேரள ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது, மசோதாக்களை மேலும் தாமதப்படுத்தும் முயற்சியில் ஆளுநர் ஈடுபடுவதாகவும் கேரள மாநில அரசு குற்றச்சாட்டு வைத்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் மசோதாக்கள் மீது காலதாமதமின்றி ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் என்றும் 2 ஆண்டுகளாக மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியது. பஞ்சாப் ஆளுநர் வழக்கில் பிறப்பித்த உத்தரவின் படி தாமதமின்றி மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். ஆளுநர் உரிய நேரத்தில் செயல்படவில்லை என்றால் மசோதாக்கள் மீது ஒப்புதல் அளிப்பதில் விதிமுறை வகுக்கவேண்டியது வரும். முதலமைச்சரை ஆளுநர் சந்திக்க விரும்புவது அரசியல் கணக்கை தீர்த்துக் கொள்ளவா, பிரச்சனைக்கு தீர்வு காணவா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
The post “வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார் கேரள ஆளுநர்: 7 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் முடிவுக்கு எதிர்ப்பு appeared first on Dinakaran.