மீண்டும் பாதுகாப்பு கிடங்கில் வைக்க முடிவு; கரூர் வீரர்களுக்கு மாவட்ட கலெக்டர் அழைப்பு

கரூர், நவ.29: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நாட்டில் உள்ள இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு, ஒன்றிய அரசின் சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த விளையாட்டு நிகழ்வாகும்.

இந்த விளையாட்டு போட்டிகள் 17 வயதுக்குட்பட்ட மற்றும் 21 வயதுக்குட்பட்ட பிரிவுகளை கொண்டுள்ளது. 2021ம் ஆண்டில் ஹரியானாவில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் 18 வயதுக்குட்பட்ட பிரிவிலும் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து இதே போன்று 2022ல் மத்திய பிரதேசத்தில் நடத்தப்பட்து.

தமிழ்நாடு முதல்வர் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023ஐ தமிழ்நாட்டில் நடத்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், 2023ம் ஆண்டு கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023 தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 நகரங்களில் அடுத்தாண்டு ஜனவரி 19ம்தேதி முதல்31ம்தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் 5000 விளையாட்டு வீரர், வீராங்கணைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தடகளம், கால்பந்த், குத்துச்சண்டை, வாள்வீச்சு, வாலிபால், பளுதூக்குதல், ஸ்குவாஷ், வில்வித்தை, ஜூடோ, கட்கா, டேபிள் டென்னிஸ், பேட்மிட்டன், சைக்கிள் ஓட்டுதல், கோ&கோ, யோகாசனம், மல்யுத்தம், ஹாக்கி, நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், களரிபயட்டு, மல்லக்கம்பு, கூடைப்பந்து, தாங்தா, சிலம்பம் ஆகியவை நடத்தப்படவுள்ளது.

மேலும், நடைபெறவுள்ள கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023ல், கூடைப்பந்து, கபடி. கோ&கோ, வாலிபால், ஹாக்கி மற்றும் கால்பந்து ஆகியவற்றுக்கான குழு விளையாட்டுக்களில் தமிழ்நாடு அணியும் இடம் பெற உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கணைகள், அவர்களின் சிறப்பான செயல்திறனின் அடிப்படையில் தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாடு அணிகளில் இடம் பெறுவதற்கான தேர்வு சோதனைகள் பல்வேறு தேதிகளில் நடத்தப்படவுள்ளது.

அதன்படி, கூடைப்பந்து பெண்கள் டிசம்பர் 1ம்தேதி காலை 7மணி, ஆண்கள் 2ம்தேதி காலை 7மணி நேரு உள்விளையாட்டு அரங்கம் சென்னை. கால்பந்து பெண்கள் நவம்பர் 30ம்தேதி காலை 7மணி, ஆண்கள் நவம்பர் 30ம்தேதி காலை 7மணி மற்றும் டிசம்பர் 1ம்தேதி காலை 7மணி நேரு உள்விளையாட்டு அரங்கம், சென்னை.
கபடி பெண்கள் நவம்பர் 30ம்தேதி காலை 7 மணி. ஆண்கள் டிசம்பர் 1ம்தேதி காலை 7மணி, மாவட்ட விளையாட்டு வளாகம், நேரு பூங்கா சென்னை. கோ&கோ பெண்கள் நவம்பர் 30ம்தேதி காலை 7மணி, ஆண்கள் டிசம்பர் 1ம்தேதி காலை 7மணி, மாவட்ட விளையாட்டு வளாகம், நேரு பூங்கா சென்னை.

வாலிபால் பெண்கள், நவம்பர் 30ம்தேதி காலை 7மணி, ஆண்கள் டிசம்பர் 1ம்தேதி காலை 7மணி, மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கம், சென்னை. ஹாக்கி பெண்கள் நவம்பர் 30ம்தேதி காலை 7மணி, ஆண்கள் டிசம்பர் 1ம்தேதி காலை 7மணி, மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கம் சென்னை ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர், வீராங்கணைகளுக்கு திறமை மற்றும் திறன்களை மேம்படுத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அந்தந்த விளையாட்டு பிரிவுகளில் தகுந்த பயிற்சி அளிக்கப்படும்.

ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட். பள்ளிக் கல்விச் சான்றிதழ் (எஸ்எஸ்எல்சி, 10ம் வகுப்பு). பிறப்புச் சான்றிதழ் (குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முன்பு, மாநகராட்சி அல்லது கிராம பஞ்சாயத்து மூலம் ஜனவரி 1, 2013 அன்று அல்லது அதற்கு முன் வழங்கப்பட்டது). தகுதியுள்ள அனைத்து விளையாட்டு, வீரர் வீராங்கணைகளும் தேர்வு சோதனைகளில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள். எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள், இந்த திட்டத்தின் கீழ் பயனடைய வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறமை மற்றும் திறன்களை மேம்படுத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அந்தந்த விளையாட்டு பிரிவுகளில் தகுந்த பயிற்சி அளிக்கப்படும்.

The post மீண்டும் பாதுகாப்பு கிடங்கில் வைக்க முடிவு; கரூர் வீரர்களுக்கு மாவட்ட கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: