அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
பிறந்த நாளில், முதல்வர்-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துதான் முதல் வாழ்த்து. நேரில் சென்றதும், ‘இளைஞர் அணி மாநாடு குறித்து, நான் எழுதிய கடிதத்தைப் படித்தாயா?’ என்றபடி வாழ்த்தினார். சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்கின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றதில் மிக மகிழ்ச்சி. வி.பி.சிங் என் மனதுக்கு நெருக்கமான தலைவர்களில் ஒருவர். அதைத்தொடர்ந்து திமுக நிர்வாகிகள் இளைஞர் அணி சகோதரர்களுடன் மதிய உணவு உண்டு மகிழ்ந்தேன். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மக்கள், இளைஞர் அணியைச் சேர்ந்த சகோதரர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினருக்கு நன்றி.
பிறந்த நாள் வாழ்த்துகளை, நான் மென்மேலும் உற்சாகத்துடன் உழைப்பதற்கான எரிபொருளாகவே எடுத்துக்கொள்கிறேன். மாநில உரிமை மீட்பு முழக்கத்துடன் சேலத்தில், வரும் டிசம்பர் 17ம் தேதி நாம் முன்னெடுக்கும் திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாட்டின் வெற்றிக்காக உழைக்க உறுதியேற்போம். வாழ்த்திய அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.
The post இளைஞர் அணி மாநாட்டு வெற்றிக்கு உறுதியேற்போம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை appeared first on Dinakaran.