4 வழிச்சாலையின் நடுவில் செடிகள் வைக்க வேண்டும்

அரூர், நவ.28: அரூர் அருகே, அ.பள்ளிப்பட்டி முதல் ஊத்தங்கரை வரையில் 47 கி.மீ., தூரம் ₹350 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் முடிந்து சுமார் 2 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ள நிலையில், சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன் பகுதியில் செடிகள் வைக்கவில்லை. சாலை விரிவாக்கம் செய்த போது, சென்டர் மீடியன் அமைத்து மண் கொட்டியும், இதுவரை செடிகள் நடவில்லை. இதனால் 4வழிச்சாலையில் இரவு நேரங்களில் எதிர்புறம் சாலையில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தால், வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்து வருகின்றனர்.

எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலையின் சென்டர் மீடியனில் செடிகள் வைத்து பராமரிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன், வாகன ஓட்டிகளுக்கு இரவு நேரங்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

The post 4 வழிச்சாலையின் நடுவில் செடிகள் வைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: