இதன்மூலம் பொதுமக்களிடம் இருந்து ரூ.400 கோடி வரை அந்த நிறுவனம் வசூல் செய்தது. கடந்த ஆண்டு திடீரென இந்த நிதி நிறுவனத்தினர் தலைமறைவாகி விட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நிதி நிறுவனத்தை சேர்ந்த இயக்குநர்கள் உள்ளிட்ட 44 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நிறுவனத்தின் இயக்குனரான காரைக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியனை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி ஸ்ரீராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.சுப்பிரமணியன் அரசு வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார்.
The post ரூ.400 கோடி மோசடியில் தேடப்பட்டுவந்த நிதி நிறுவன இயக்குனர் கைது appeared first on Dinakaran.
