இவரது மகனும், 5ம் வகுப்பு படித்து வருவதால், அரசின் மூலம் ரூ.4,000 உதவித்தொகை கிடைக்கும் என்பதால் மீண்டும் விஏஓ ஆரோக்கிய பாஸ்கரராஜை அணுகி தனது கணவரின் இறப்பு சான்றிதழை வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது சான்றிதழ் வேண்டும் என்றால் என்னுடம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் இளம்பெண் புகார் அளித்ததை தொடர்ந்து, அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், விஏஓ ஆரோக்கிய பாஸ்கர்ராஜ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.
The post சான்றிதழ் கேட்டு சென்ற பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் சஸ்பெண்டான விஏஓ கைது appeared first on Dinakaran.