ஆந்திராவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்த திருவண்ணமலையைச் சேர்ந்த ரித்திஷ் குமார் (19) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ரயிலில் கொருக்குப்பேட்டையில் இறங்கி ஆட்டோ மூலம் கோயம்பேடு செல்ல இருந்தவர், புளியந்தோப்பில் நடந்த வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கினார்.