காவலர் சீருடையில் வந்த 3 பேர், வியாபாரி வெங்கடேசன் சென்ற காரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர். காரில் பணம் இருப்பதைக் கண்ட மூவரும் கறுப்புப் பணம் எனக் கூறி ரூ.50 லட்சத்தை பறித்துச் சென்றுள்ளனர். செங்காந்தள் விதைகளை வாங்கி வியாபாரம் செய்யும் வெங்கடேசனிடம் ரூ.50 லட்சம் பறித்த தம்பதி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் வெங்கடேசன் அளித்த புகாரை அடுத்து மோசடி ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
The post திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் போலீஸ் எனக்கூறி ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் 6 பேர் கைது..!! appeared first on Dinakaran.