ஜனாதிபதியுடன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திப்பு

புதுடெல்லி: புதுடெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் நேற்று காலை சந்தித்தார். இது குறித்து ஜனாதிபதி அலுவலக டிவிட்டர் பதிவில், தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட், ஜனாதிபதி முர்முவுக்கு மலர்க்கொத்து வழங்கும் புகைப்படம் வெளியிடப்பட்டது. தலைமை நீதிபதி சந்திரசூட் தனது மனைவி கல்பனா தாஸ் மற்றும் தனது இரு வளர்ப்பு மகள்களுடன் ராஷ்டிரபதி பவனில் உள்ள ‘அம்ரித் உத்யான்’ தோட்டத்தை பார்வையிட்டார்.

The post ஜனாதிபதியுடன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: