இந்தநிலையில் கணவரின் இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை உதவித்தொகை வழங்ககோரி நல்லாப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாசிடம் அவர் விண்ணப்பித்துள்ளார். இந்த சான்றிதழ் வழங்க அரோக்கியதாஸ் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து ரூ.3000 கொடுத்து இறப்பு சான்றிதழை அந்த இளம்பெண் பெற்றுள்ளார். பின்னர், அந்த பெண்ணின் எண்ணை அவர் தொடர்பு கொண்டு தனியாக வர வேண்டுமென்று அழைத்து உள்ளார்.
அப்போது விதவை சான்றிதழ் கொடுக்க வேண்டுமென்றால் என்னிடம் 5 நிமிடம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று இளம்பெண்ணுக்கு, ஆரோக்கியதாஸ் செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார். இதையடுத்து அவரிடம் செல்போனில் பேசிய ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்ட பெண், எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆரோக்கியதாசை சஸ்பெண்ட் செய்து கோட்டாட்சியர் காஜாசாகுல் அமீது நேற்று உத்தரவிட்டுள்ளார்.
The post ‘சான்றிதழ் வேணும்னா என் கூட சந்தோஷமா இரு…’ பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த விஏஓ சஸ்பெண்ட்: விழுப்புரம் கோட்டாட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.