மதுபாரில் இருந்து வெளியே வந்த இளம் பெண்கள் குறித்து சிலர் ஆபாசமான வார்த்தைகளை கூறியுள்ளனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட இளம் பெண்களில் ஒருவர், புகார் அளித்தார். புகாரின் மீது சைதாப்பேட்டை போலீசார், இளம்பெண் அளித்த வீடியோ பதிவுகளை வைத்து விசாரணை நடத்திய போது, நியூஸ் தமிழ் 24X7 தொலைக்காட்சியின் நிருபர் மற்றும் சிலர் ஆபாசமாக பேசியது உறுதியானது. அதைதொடர்ந்து சைதாப்பேட்டை போலீசார் நிருபர் சுதர்சன் மற்றும் சிலர் மீது ஐபிசி 143, 341, 294(பி), 354(எ)509 மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் என 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பாரில் இருந்து வெளியே வந்த இளம்பெண்ணிடம் ஆபாச பேச்சு தனியார் தொலைக்காட்சி நிருபர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு: சைதாப்பேட்டை போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.