ஆனால் அப்போதும் புறப்படவில்லை. இந்நிலையில், சென்னையில் இருந்து இரவு 7 மணிக்கு, அகமதாபாத் செல்ல வேண்டிய அதே தனியார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், இரவு 10 மணி வரையில் புறப்படவில்லை. அந்த பயணிகளும், டெல்லி பயணிகளுடன் சேர்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாலை 6:25 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய விமானம், 4 மணி நேரம் தாமதமாக இரவு 10:35 மணிக்கு புறப்பட்டு சென்றது. அதேபோல் இரவு 7 மணிக்கு அகமதாபாத் செல்ல வேண்டிய விமானம், இரவு 10:50 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் 300க்கும் மேற்பட்ட பயணிகள் அவதிப்பட்டனர்.
The post சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 2 விமானங்களின் புறப்பாடு 4 மணி நேரம் தாமதம்: 300க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி appeared first on Dinakaran.