விராலிமலை பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை

 

விராலிமலை,நவ.24: விராலிமலையில் கொட்டித் தீர்த்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல், குடுமியான்மலை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் புதன்கிழமை நள்ளிரவு முதல் சாரல் மழையாக தொடங்கி பின்னர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதில் விராலிமலை 3.2 செ.மீ, அன்னவாசல் 3.4 செ.மீ, குடுமியான்மலை 1.9 செ.மீ, இலுப்பூர் 1.7 செ.மீ. மழை பெய்தது. கடந்த சில நாட்களாக மழையை எதிர்பார்த்து பொதுமக்கள் காத்திருந்து ஏமாற்றமே மிஞ்சிய நிலையில் நேற்று பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post விராலிமலை பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை appeared first on Dinakaran.

Related Stories: