மெட்ரோ ரயில் பணிக்கு வைத்திருந்த 4 டன் இரும்பு கம்பி திருட்டு: 2 பேர் கைது

அண்ணாநகர்: கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதற்கா, இரும்பு கம்பிகளை வைத்துள்ளனர். இதில் 4 டன் இரும்பு கம்பிகள் கடந்த 8ம் தேதி இரவு திருடுபோனது. இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிறுவன மேனேஜர் வினோத்குமார் (33), கோயம்பேடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது 2 பேர், இரும்பு கம்பிகளை திருடிச்செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதை வைத்து விசாரித்தபோது, கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சுற்றிவந்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்த குமார் (32), கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த முனுசாமி (33) ஆகியோர், இரும்பு கம்பிகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்களை நேற்று முன்தினம் கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

 

The post மெட்ரோ ரயில் பணிக்கு வைத்திருந்த 4 டன் இரும்பு கம்பி திருட்டு: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: