குஜராத் வாபி ரயில்நிலையத்தில் தவறி விழுந்த முதியவரை உடனடியாக மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள்..!!

குஜராத்: வாபி ரயில்நிலையத்தில் ரயில் முன் தவறி விழுந்த முதியவரை ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் மீட்டுள்ளனர். வாபி ரயில் நிலையத்துக்குள் சூரத்-மும்பை பாந்தரா ரயில் வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தை முதியவர் கடக்க முயன்றார். தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவர் கால் இடறி தண்டவாளத்தின் குறுக்கே விழுந்து விட்டார்.

ரயில் நெருங்கிவிட்ட நிலையில் எழுந்திருக்க முடியாமல் தவித்த முதியவரை மீட்க ரயில்வே பாதுகாப்பு வீரர் ஓடிவந்தார். ரயில் அருகில் வந்துவிட்ட போதிலும் தனி ஒருவராக முதியவரை தூக்க முடியாததைப் பார்த்த மேலும் 2 பேர் ஓடி வந்தனர். ரயில் நடைமேடை அருகில் வர ஓரிரு நொடிகளுக்கு முன் 3 பேரும் சேர்ந்து முதியவரை தூக்கி காப்பாற்றும் சிசிடிவி வெளியானது.

The post குஜராத் வாபி ரயில்நிலையத்தில் தவறி விழுந்த முதியவரை உடனடியாக மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: