சூளகிரியில் கொட்டி தீர்த்த கனமழை

சூளகிரி, நவ.23: சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குளிர்காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் முதலே, சூளகிரி சுற்றுவட்டார பகுதியில் கருமேகங்கள் திரண்டுவந்தது. மதியம் திடீரொன மழை பெய்யத் துவங்கியது. வேம்பள்ளி, கொள்ளப்பள்ளி, தியாகாரசனப்பள்ளி, மேடுபள்ளி, சின்னார் மற்றும் சுற்றுவட்டாரத்தில் மழை பெய்தது. மாலை வரை விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் வீடுகளையும், விளை நிலங்களிலும் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, மழைநீர் சாலையில் வழிந்தோடியது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

The post சூளகிரியில் கொட்டி தீர்த்த கனமழை appeared first on Dinakaran.

Related Stories: