அந்த வகையில், அடையாறு இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில், சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர்கள் பலர் வந்து செல்வதாக, விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜேஸ்வரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வராணி தலைமையிலான மகளிர் போலீசார், சம்பந்தப்பட்ட வீட்டின் அருகே நேற்று முன்தினம் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, வாலிபர்கள் சிலர் அந்த வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் அதிரடியாக அந்த வீட்டிற்குள் நுழைந்து, ஆய்வு செய்தனர்.
அப்போது, காட்டுப்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாலியல் புரோக்கர் மாதவன் ராஜ் (எ) சிவன் (28), மயிலாப்பூர் கோயில் தோட்டம் பகுதியை சேர்ந்த வரதன் (எ) வரதராஜ் (53) ஆகியோர் வாட்ஸ்அப் குழு அமைத்து, அந்த வீட்டில் பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய வடமாநில பெண் உட்பட 5 இளம்பெண்கள் மீட்கப்பட்டு, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
The post வாட்ஸ்அப் குழு அமைத்து பாலியல் தொழில் நடத்திய புரோக்கர்கள் 2 பேர் கைது: ஐந்து பெண்கள் மீட்பு appeared first on Dinakaran.