இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருநாள் வரும் 26ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதையொட்டியும், 27ம் தேதி பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும், அனைத்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பாக சிறப்பு பேருந்துகள் சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை 2700 சிறப்பு பேருந்துகள் மூலம் 6947 வழித்தடங்களில் இயக்கப்பட்ட உள்ளன.
மேலும், திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக 40 சிற்றுந்துகள் பயணிகள் கட்டணமில்லா சிற்றுந்துகளாக இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
The post கார்த்திகை தீபத்திருவிழா திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்பு பஸ்கள்: அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.
