ஆண்டின் சிறந்த தொழில்முனைவோர் விருது கார் டெக்னாலஜிஸ் தலைமை நிர்வாக அதிகாரி மாறன் நாகராஜனுக்கும், தனியார் துறையில் தொழில்நுட்பத்தின் முன்மாதிரியான பயன்பாடு விருது விங்கா மென்பொருள் தலைமை நிர்வாக அதிகாரி பிரசன்ன சவுந்தர பாண்டியன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
பொதுத்துறையில் தொழில்நுட்பத்தின் முன்மாதிரியான பயன்பாடு விருது வேளாண் ஆணையர் சுப்பிரமணியத்திற்கும் வழங்கப்பட்டது. இந்த மாநாட்டில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ‘‘தமிழகம் முழுவதும் ஐடி துறையில் 10 ஆயிரம் வேலைகளுக்குப் பதிலாக, 25 ஆயிரம் வேலைகளை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்’’ என்றார்.
The post தமிழகம் முழுவதும் மாதம்தோறும் 25 ஆயிரம் வேலை: ஐ.டி.நிறுவனங்களுக்கு அமைச்சர் பி.டி.ஆர் வேண்டுகோள் appeared first on Dinakaran.