இந்த விபத்தில் மினி லாரியில் பயணம் செய்த வள்ளி (55), இளங்கொடி (55) மற்றும் கஸ்தூரி (50) ஆகிய 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயமின்றி தப்பினார். தகவல் அறிந்ததும் ஆரம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் படுகாயம் அடைந்த 3 பெண்களையும் கோட்டக்கரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, விபத்துக்கான காரணம் குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post எளாவூர் மேம்பால சாலை தடுப்பில் மினி லாரி மோதியதில் 3 பெண்கள் படுகாயம் appeared first on Dinakaran.