அடகு கடையில் நகை கொள்ளை

ஆவடி: திருநின்றவூர், நாராயணசாமி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் மயூர் (32). இவர், திருநின்றவூர் ஸ்ரீராம் நகரில் அடகு கடை நடத்தி வருகிறார். இரு தினங்களுக்கு முன் கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் காலையில் கடைக்கு சென்று பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 6 சவரன் நகை மற்றும் 450 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்படி, திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

The post அடகு கடையில் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: