இந்த குழுவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், முன்னாள் இந்திய நிர்வாக சேவை அதிகாரி என்.கே.சிங், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் கடந்த அக்டோபர் 23-ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. எதிர்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுனா கார்கே இந்தக் குழுவில் இடம்பெறாதது குறித்து காங்கிரஸ் கட்சி அதிருப்தி தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளித்தால் நாட்டின் நலனுக்கு நன்மை அளிக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகளை கேட்க உள்ளோம். நாட்டின் நலனுக்காக அனைத்துக் கட்சிகளும் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு கூறியுள்ளார்.
The post ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வேண்டுகோள் appeared first on Dinakaran.
