நிறைய வேலைகளுக்கு மத்தியில் பிசிசிஐ நிர்வாகம் தனக்கு அழைப்பு விடுக்க மறந்திருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார். 1980களில் சாதாரணமாக இருந்த இந்திய அணியை வழிநடத்தி அப்போதைய ஜாம்பவான் அணியான வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி உலக கோப்பையை வென்று தந்த கபில் தேவிற்கு அழைப்பு விடுக்காததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் இது குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ், உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு கபில் தேவை அழைக்காதது அற்பத்தனமானது மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று தெரிவித்தார். மேலும் தனது மனதில் பட்டதைப் பேசக்கூடியவர் கபில் தேவ் என கூறிய ஜெயராம் ரமேஷ், சில மாதங்களுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக கபில் தேவ் கருத்து தெரிவித்திருந்ததையும் நினைவுக் கூறினார்.
The post உலக கோப்பை இறுதிப் போட்டியைக் காண கபில் தேவை அழைக்காதது அற்பத்தனமானது : காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.