வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் கட்டடத்தின் முதல்தள மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

சேலம்: வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் கட்டடத்தின் முதல்தள மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். பொன்மலை என்பவருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக கிடங்கு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ராட்சத இயந்திரம் மூலம் கான்கீரிட் பணி நடந்து கொண்டிருக்கும் போது முதல்தள மேற்கூரை இடிந்து விழுந்தது. மேற்கூரை இடிந்து விழுந்ததில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

The post வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் கட்டடத்தின் முதல்தள மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: