இதன் காரணமாக ஆஸ்துமா , இருதய நோய் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இன்றும் நாளையும் பட்டாசுகள் அதிகளவில் வெடிக்கப்படும் என்பதால் காற்றின் தரம் மேலும் மோசமாகும் என்றும் அஞ்சப்படுகிறது.காற்றின் தரக் குறியீடு 0 – 50 வரையில் இருந்தால், காற்றின் தரம் நன்றாக இருப்பதாக அர்த்தம். அதுவே, அக்குறியீடு 400 – 500 ஆக இருந்தால், காற்று மிகவும் மாசடைந்து இருப்பதாக அர்த்தம்.இதனிடையே டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அபாய அளவை தாண்டி நீடிப்பதால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ஆனந்த் விகாரில் காற்றின் தரக்குறியீடு 28, ஆர்கே புரத்தில் காற்றின் தரக்குறியீடு 220 என்ற அளவில் உள்ளது.
The post டெல்லியை தொடர்ந்து சென்னையிலும் காற்று மாசு அதிகரிப்பு.. அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் காற்றின் தரக் குறியீடு 230 appeared first on Dinakaran.