இதில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்த விருந்தினர்களிடையே பேசிய கமலா ஹாரிஸ், “இஸ்ரேல் ஹமாஸ் போர் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இந்த போர் முடிவுக்கு வர வேண்டும் என அனைவரும் விரும்புகிறோம். உலகம் தற்போது கடினமான, இருண்ட சூழலில் உள்ளது. இந்த தருணத்தில் ஒளியின் திருவிழாவான தீபாவளியை கொண்டாடுவது முக்கியம்” என்று கூறினார்.
இங்கிலாந்திலும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் டவுனிங் தெருவில் உள்ள இல்லத்தில் நேற்று தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். இங்கிலாந்தில் வசிக்கும் இந்து சமுதாயத்தை சேர்ந்த பலர் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். ரிஷி சுனக்கும், அவரது மனைவியும் குத்து விளக்கேற்றி பண்டிகையை தொடங்கி வைத்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் பிரதமரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வௌியாகி உள்ளது.
The post தீபாவளி கொண்டாடிய ரிஷி சுனக், கமலா ஹாரிஸ் appeared first on Dinakaran.