சாலையில் கொட்டப்பட்டுள்ள காய்கறி கழிவுகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

கரூர், நவ. 9: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரத்தினம் சாலையில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியின் வழியாக, வாங்கல், நெருர், பசுபதிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் ரத்தினம் சாலை வழியாக சென்று வருகிறது.இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் காய்கறி கழிவுகள் ரத்தினம் சாலையோரம் கொட்டுவதால், பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.காய்கறி கழிவுகள் மழையோடு சேர்ந்து மக்கி, ஒருவித துர்நாற்றத்தையும் ஏற்படுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதன் காரணமாக இந்த பகுதியினர் பல்வேறு தொற்றுநோய்களுக்கு ஆளாகின்றனர்.எனவே, இந்த பகுதியில் காய்கறி கழிவுகள் கொட்டப்படுவதை கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post சாலையில் கொட்டப்பட்டுள்ள காய்கறி கழிவுகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: