கல்லூரி மாணவர் விஷம்குடித்து சாவு

ஆறுமுகநேரி, நவ. 8: காயல்பட்டினம் கோமான் கீழத்தெருவை சேர்ந்தவர் அப்துல்ரகுமான் மகன் கதிர்முகமது(20). தூத்துக்குடி கல்லூரியில் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர், கல்லூரிக்கு செல்லாமல் இருந்ததை அப்துல்ரகுமான் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட கதிர்முகம்மது, நேற்று முன்தினம் (6ம் தேதி) படுக்கை அறையில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி எஸ்ஐ பிரபகுமார் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

The post கல்லூரி மாணவர் விஷம்குடித்து சாவு appeared first on Dinakaran.

Related Stories: