இந்நிலையில், நேற்று காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதார துறை சார்பில், நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி நடைபயிற்சி மேற்கொள்ளும் வழித்தடங்களில் தாகம் தீர்க்கும் தண்ணீர் வசதி, அமர்வதற்கான வசதி, மற்றும் பசுமை பேணிக்காக்கும் வகையில் மர கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதார துறை துணை இயக்குநர் பிரியாராஜ் தலைமை தாங்கி மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார். இதில், மலேரியோ அலுவலர் மணி வர்மா, காஞ்சிபுரம் மாநகராட்சி நகர் நல அலுவலர் அருள் நம்பி, மருந்தாளுனர் பழனிவேலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நடைபயிற்சி நடைபெறும் வழித்தடங்களாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து திருப்பருத்திக்குன்றம் – கீழ்கதிர்பூர் சாலை மார்க்கமாக கீழ்கதிர்பூர் கூட்டுசாலை வரை சென்று மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
The post நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சியையொட்டி நடை பயிற்சி பாதைகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.