எனவே தொடர்ந்து 3 முறை கணேசன் போன் செய்தார். மீண்டும் 4வது முறையாக போன் செய்து, ‘‘எனக்கு நெஞ்சுவலி என்றால் ஆம்புலன்ஸ் வருவதில்லை. நான் முதலமைச்சர் வீடு உட்பட 8 இடங்களில் சென்னையில் குண்டு வைத்துள்ளேன். இது சில மணி நேரங்களில் வெடிக்கும்’’ என தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் நிறுவனத்தினர் காவல்துறைக்கு இது குறித்து புகார் தெரிவித்தனர். இதையடுத்து சென்னையில் இருந்து ஊட்டி எஸ்பிக்கு தகவல் அளிக்கப்பட்டது. நீலகிரி எஸ்பி சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில், லவ்டேல் போலீசார் விசாரணை நடத்தி கணேசன்தான் போன் செய்து மிரட்டியதை உறுதி செய்தனர். இதையடுத்து அவர்கள் தாம்பட்டி பகுதிக்கு சென்று கணேசனை கைது செய்தனர்.
The post 8 இடத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது appeared first on Dinakaran.
