இதையடுத்து சாலையை சீரமைக்க, கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, புதிய சாலை மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் துவங்கியது. இந்த சாலை பணி டிசம்பர் 16க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் சாலை வழியாக சென்று தனியார் விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து சென்று விற்பனை செய்யும் 40க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் தினசரி 200 முறைக்கும் மேலாக செல்வதால் சாலை பணிக்கு இடையூறாக உள்ளது.
அதனால் கடந்த 5 மாதத்தில் 100 மீட்டர் தூரத்திற்கு கூட சாலை பணி முடியாமல் மந்தகதியில் நடந்து வருகிறது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால், சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இந்த டேங்கர் லாரிகளுக்கு தடை வித்து, சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தகோரி, அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் டேங்கர் லாரிகளை சிறைபிடிக்க வந்தனர். தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை போலீசார் பொதுமக்களிடம், ‘‘நீங்கள் கோரிக்கை மனு வழங்கினால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என கூறினர். இதையடுத்து அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
The post தனியார் குடிநீர் லாரிகளால் சாலை அமைக்கும் பணி பாதிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.