இந்த இரு விமான சேவைகளும் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இலங்கை பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, இரவு நேர இந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்களில் பயணம் செய்ய இருந்த பயணிகள், இன்று காலை 7.30 மணிக்கு, இலங்கையில் இருந்து சென்னை புறப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்திலும், அதேபோல சென்னையில் இருந்து காலை 9.50 மணிக்கு இலங்கைக்கு புறப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்திலும் அனுப்பி வைக்கப்பட்டனர். விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
The post மோசமான வானிலையால் சென்னை-இலங்கை விமானம் இன்று ரத்து appeared first on Dinakaran.
