கொடிவயல் கிராமத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்

 

அறந்தாங்கி,நவ.6: சேலத்தில் நடக்க உள்ள திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு கொடிவயல் கிராமத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொடிவயல் ஊராட்சியில் டிசம்பர் 17ம்தேதி திமுக இளைஞரணி மாநில மாநாட்டை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. நிகழ்ச்சியை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். போட்டியில் சின்னமாடு, 4 பல்கன்று என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் புதுக்கோட்டை, தஞ்சை திருச்சி, தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன. போட்டியில் கலந்து கொண்ட இரட்டை மாட்டு வண்டிகள் நிர்ணயிக்கப்பட்ட பந்தய இலக்கினை நோக்கி சீறிப்பாய்ந்தது. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.

The post கொடிவயல் கிராமத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் appeared first on Dinakaran.

Related Stories: