இந்த நிலையில் உரிமையியல் நீதிபதி பதவிக்கான மெயின் தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை மொழியாக்கம் தேர்வு நடந்தது. முதன்மை தேர்வு சென்னையில் 25 மையங்களில் மட்டும் நடந்தது. தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்வர்கள் காலை 7 மணி முதலே தேர்வு எழுதும் மையங்களுக்கு வர தொடங்கினர். அங்கு அவர்கள் இறுதிக்கட்ட தேர்வுக்கு தயாராகும் பணியில் ஈடுபட்டனர். தேர்வு நடைபெற்ற மையங்களில் தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு கூடங்களுக்கு தேர்வர்கள் கடும் சோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். சென்னை மைலாப்பூர் பிஎஸ் மேல்நிலைபள்ளியில் நடைபெற்ற தேர்வை டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். இதே போல மற்ற மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து பிற்பகல் முதல்தாள் தேர்வு (சட்டம்) நடந்தது. தொடர்ந்து இன்று காலை இரண்டாம் தாள் தேர்வும், பிற்பகலில் 3ம் தாள் தேர்வும் நடக்கிறது. தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
The post உரிமையியல் நீதிபதி பதவிக்கான மெயின் தேர்வு: தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.