முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் திமுக வாக்குச்சாவடி பாக முகவர்கள் பாசறை மாநாடு: இறுதி கட்ட பணிகளை அமைச்சர் காந்தி ஆய்வு

திருவள்ளூர்: சென்னை மண்டல திமுக வாக்குச்சாவடி பாக முகவர்கள் பாசறை மாநாடு நாளை நடைபெறவுள்ளது. இதுகுறித்த முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் காந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தனார். 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ‘‘நாற்பதும் நமதே, நாடும் நமதே’’ என்பதை வலியுறுத்தி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டங்களை மண்டல வாரியாக திமுக நடத்தி வருகிறது. இதில் நாளை சென்னை மண்டல பாசறை கூட்டம் திருவள்ளூர் – ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள ஐ.சி.எம்.ஆர். திடல் அருகே மைதானத்தில் நடக்கிறது. நாளை காலை 9 மணி முதல் திமுக மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாகமுகவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

தொடர்ந்து, 4 மணியளவில் நடைபெறும் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் கடந்த 25 நாட்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ஒருங்கிணைந்த சென்னையில் 6 மாவட்டங்கள், காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு, திருவள்ளூர் மத்திய, கிழக்கு, மேற்கு என 11 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் 11 ஆயிரத்து 569 பேர் அமரும் இடம், முதல்வர் அமரும் மேடை, வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகியவற்றை ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், துணி நூல் மற்றும் கைத்தறித்துறை அமைச்சருமான ஆர்.காந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, மாவட்ட செயலாளர்கள் எஸ்.சந்திரன் எம்எல்ஏ, டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆதிசேஷன், மாவட்ட நிர்வாகிகள் திராவிடபக்தன், உதயமலர் பாண்டியன், ஜெயபாரதி, பொதுக்குழு உறுப்பினர் சிட்டிபாபு, நகர செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், ரமேஷ், கிறிஸ்டி, அரிகிருஷ்ணன், ஜெயசீலன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிரண், துணை அமைப்பாளர் மோதிலால், சுகுமார், பாபு, புவனேஷ்குமார், மிஸ்டர் தமிழ்நாடு திலீபன், மாவட்ட அமைப்பாளர்கள் நேதாஜி, வழக்கறிஞர் நாகராஜ், பன்னீர்செல்வம், சரஸ்வதி சந்திரசேகர், இன்ஜினியர் விஜயகுமார், அருண், பன்னீர்செல்வம், சித்திக், கோபால், நிர்வாகிகள் கமலக்கண்ணன், பட்டறை பாஸ்கர், பிரபாகரன் மற்றும் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரநிதிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் திமுக வாக்குச்சாவடி பாக முகவர்கள் பாசறை மாநாடு: இறுதி கட்ட பணிகளை அமைச்சர் காந்தி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: