மேலும், இவரது குடிப்பழக்கத்தை பயன்படுத்தி, ஒப்பந்ததாரர்கள் காசோலை பெறுவதற்கு மதுவை வாங்கி கொடுத்து காரியம் சாதித்து வருவதாக குற்றம்சாட்டினர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஒப்பந்ததாரர் ஒருவர், பி.டி.ஓ. சங்கருக்கு வழக்கம்போல் மது வாங்கி கொடுத்துள்ளார். அலுவலகத்தில், தனது இருக்கையில் கையில் மது பாட்டிலுடன் பி.டி.ஓ. சங்கர் இருக்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியது அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கலெக்டர் சாந்தி விசாரனை நடத்தி, பி.டி.ஓ. சங்கரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
The post பணியின் போது போதையில் இருந்த பிடிஓ சஸ்பெண்ட் appeared first on Dinakaran.