இந்நிலையில் மழை விட்டுவிட்டு பெய்வதால் நெல்மணிகளை காய வைக்க முடியாமல் விவசாயிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பூண்டி, சாயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நெல்மணிகளை சாலையில் கொட்டி காயவைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. விட்டுவிட்டு மழை பெய்து வரும் நேரத்தில் அரசு தங்களின் நிலை உணர்ந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை தளர்வு செய்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
The post தஞ்சாவூரில் குறுவை நெல் அறுவடை தீவிரம்: மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.
