ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு சொந்தமான ரூ.538 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை..!!

மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு சொந்தமான ரூ.538 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. கனரா வங்கியில் கடன் பெற்று ரூ.538 கோடி ஏமாற்றியதாக பதிவான வழக்கில் நரேஷ் கோயலின் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நரேஷ் கோயலுக்குச் சொந்தமான 17 பங்களாக்கள், வணிக வளாகங்கள் மற்றும் லண்டன், துபாயில் உள்ள சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளது. வங்கிக் கடன் தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த செப்.1-ம் தேதி நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டார்.

The post ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு சொந்தமான ரூ.538 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை..!! appeared first on Dinakaran.

Related Stories: