காவிரி ஆணையம் நவ.3ல் கூடுகிறது

புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 3ம் தேதி டெல்லியில் கூடுகிறது. காவிரி ஒழுங்காற்று குழுவின் 89வது கூட்டத்தில் காவிரியில் இருந்து மேலும் 23 நாட்களுக்கு அதாவது, நவம்பர் 1ம் தேதி முதல் 23ம் தேதி வரையில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2600 கன அடி என்ற வீதம் கர்நாடகா அரசு தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. இதையடுத்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 3ம் தேதி டெல்லியில் அதன் தலைவர் ஹல்தர் தலைமையில் நடைபெற உள்ளது.

The post காவிரி ஆணையம் நவ.3ல் கூடுகிறது appeared first on Dinakaran.

Related Stories: