இந்தநிலையில் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது எர்ணாகுளம் மத்திய போலீஸ் வழக்கு பதிவு செய்து உள்ளது. அனில் ஆண்டனி மீதும் வழக்கு : கேரளாவில் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பஸ்சை முஸ்லிம் மாணவிகள் சிலர் வழிமறித்த சம்பவம் தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் அனில் ஆண்டனி கேரளாவில் ஒரு பஸ்சில் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பர்தா அணியச் சொல்லி சில இளம்பெண்கள் வாக்குவாதம் செய்வதாக பதிவிட்டிருந்தார். இதையடுத்து அனில் ஆண்டனி மீது காசர்கோடு போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
The post மத ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சி ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது வழக்கு appeared first on Dinakaran.