பெல்லாரி நகரில் வருவாய் துறை அதிகாரி மஞ்சுநாத் வீட்டில் லோக் ஆயுக்தா போலீசார் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், தங்க நகைகள் மற்றும் ரொக்க பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல் ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ஆன மகாதேவ் பிராதர் பாட்டீல் என்பவரது வீட்டில் ரொக்கப் பணம் மற்றும் சொத்து ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சோதனையானது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சோதனையின் முடிவில் எந்தெந்த அதிகாரிகள் வீட்டில் எவ்வளவு மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறித்த விவரங்கள் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கர்நாடகாவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 17-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வீட்டில் அதிரடி சோதனை! appeared first on Dinakaran.